பாரதிதாசன் கல்லூரியில் பல்திறன் போட்டி

 

ஈரோடு, செப், 4: ஈரோடு பாரதிதாசன் கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. ஈரோடு அருகில் உள்ள எல்லிஸ் பேட்டை பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் பள்ளிகளுக்கு இடையிலான மாணவ மாணவிகளுக்கு கட்டுரை நடனம் பேச்சு மற்றும் பல்வேறு பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பள்ளிகளில் இருந்து மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியை கல்லூரியின் தாளாளர் பெரியசாமி தொடங்கி வைத்தார். இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்லூரியின் முதல்வர் காமேஷ் பரிசுத் தொகை மற்றும் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் கல்லூரியின் பொருளாளர் முருகன், இணைச் செயலாளர்கள் வசந்தி சத்யன், பரிமளம் ராஜா முதன்மைச் செயலாளர் என்கேகேபி.நரேன்ராஜா, நிர்வாக அலுவலர் அருள்குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை