பாம்பு கடித்து விவசாயி பலி

 

ஈரோடு,ஜூன்17: பவானி அடுத்துள்ள சேவாக்கவுண்டனூர்,காசிலிங்கபுரத்தை சேர்ந்தவர் மணி(42). விவசாயி. இவரது மனைவி கார்த்திகா. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது மனைவியின் பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்துள்ளார். இரவு அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றனர்.

மணி வீட்டிற்கு வெளியே படுத்திருந்தார்.அப்போது நள்ளிரவு 1 மணியளவில் பாம்பு ஒன்று மணியின் வலது மார்பு பகுதியில் கடித்தது.இதையடுத்து உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியோடு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மணி இறந்தார்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்