பாமக நகர பொதுக்குழு கூட்டம்

ஓமலூர், அக்.10: ஓமலூர் அடுத்துள்ள கருப்பூர் பேரூர் பாமக சார்பில், நகர பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பேரூர் செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட தலைவர் மருத்துவர் மாணிக்கம், மாநில செயற்குழு உறுப்பினர் சதாசிவம், மாவட்ட துணை செயலாளர் குமார், மாவட்ட அமைப்பு செயலாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கருப்பூர் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரியை அழகுபடுத்த வேண்டும். கால்வாய்களை சீரமைத்து தண்ணீர் வருவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், கஜேந்திரன், வெங்கடேஷ், பாலசுப்பிரமணியன், ராமசுவாமி, கார்த்தி, கோவிந்தராஜ், ராமசந்திரன், பாலு, சக்தி, கேசவன், குமார், ரகுபதி, அசோக், முரளி, தனம் ஆறுமுகம், சீனி, ஜெயராம், தென்னரசு, பால்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நகர நிர்வாகி பிரகாஷ் நன்றி கூறினார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை