பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(27). இவர் ஓசூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 23ம் தேதி இரவு, கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியில் உள்ள பேக்கரி கடையில், நண்பர் பூவரசனுடன் ராஜ்குமார் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது, அம்மாபாளையத்தை சேர்ந்த சூர்யா(23) என்பவர், போதையில் வந்து தகராறு செய்துள்ளார். இதை தட்டிக்கேட்ட ராஜ்குமாரை கையில் வைத்திருந்த கத்தியால், சூர்யா குத்தினார். இதை தடுக்க வந்த பூவரசனையும் கத்தியால் குத்தினார்.