ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தின் தம்பி மகனும் பாஜ.வில் இணைந்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத்தின் இளைய சகோதரர் லியாகத் அலியின் மகன் முபாஷிர் ஆசாத். லியாகத் அலி கடந்த 2009ம் ஆண்டு பாஜ.வில் இணைந்தார். இந்நிலையில், முபாஷிர் ஆசாத்தும், அவரது ஆதரவாளர்களும் ஜம்மு காஷ்மீர் பாஜ தலைவர் ரவீந்தர் ரெய்னா முன்னிலையில் நேற்று பாஜவில் இணைந்தனர். இது குறித்து முபாஷிர் ஆசாத் கூறுகையில், ‘காங்கிரஸ் கட்சியின் கவர்ச்சியான தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத்தை காங்கிரஸ் நடத்திய விதம், பொதுமக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது. தேசத்திற்கான அவரது சேவைக்காக அவர் பிரதமரால் பாராட்டப்பட்டார், ஆனால் கட்சியால் ஓரங்கட்டப்பட்டார். காங்கிரஸ் உட்கட்சி பூசலில் சிக்கித் தவிக்கிறது. மோடியின் மக்கள் சேவையால் நான் ஈர்க்கப்பட்டேன்,’ என்றார். …