பாஜ நிர்வாகி கார் மோதி அரசு அதிகாரி பலி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள ஆவரங்காட்டை சேர்ந்தவர் முருகன் (38). இவர் திருப்புவனம் யூனியனில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணி புரிந்து வந்தார். இவரது மனைவி மலையம்மாள். இவர் மதுரை நகரில் போலீசாக பணியாற்றி வருகிறார். இதனால் இருவரும் மதுரை ரிசர்வ் லயனில் உள்ள போலீஸ் குவார்ட்டர்சில் வசித்து வந்தனர். நேற்று இரவு திருப்புவனத்தில் இருந்து, மதுரைக்கு முருகன் டூவீலரில் வந்து கொண்டிருந்தார். திருப்புவனம் வடகரையை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் பாரதிய ஜனதா கட்சியின் திருப்புவனம் மேற்கு ஒன்றியத் தலைவராக உள்ளார். இவர் தனது காரில் மானாமதுரையில் இருந்து 4 வழிச்சாலை வழியாக திருப்புவனத்திற்கு வந்து கொண்டிருந்தார். திருப்பாச்சேத்தி அருகே கொத்தங்குளம் விலக்கு பகுதியில், சாலை திருப்பத்தில் எதிரே வந்த முருகனின் டூவீலர் மீது, இவரது கார் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் டூவீலரை ஓட்டி வந்த  முருகன்(38), படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து, திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிந்து, காரை ஓட்டி வந்த பாஜ பிரமுகர் பிரபாகரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு