பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புகளின் ₹465 கோடி நிதி தடுப்பு: அமெரிக்கா அறிக்கை

வாஷிங்டன்:  பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளின் ₹465 கோடி நிதி தடுக்கப்பட்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.அமெரிக்காவின் வெளிநாட்டு சொத்து கட்டுப்பாடு கருவூல அலுவலகம் சர்வதேச தீவிரவாத அமைப்புகள் மற்றும் தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளின் சொத்துக்கள் மீது தடை விதித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இத்தகைய தடைகளின் மூலம் தீவிரவாத அமைப்புகளுக்கு செல்ல வேண்டிய நிதி தடுக்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த 2019ம் ஆண்டில், தீவிரவாத அமைப்புகளுக்கு செல்ல வேண்டிய ₹465 கோடி நிதி தடுக்கப்பட்டுள்ளதாக கருவூலத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.இதில், பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் ரூ.25 கோடி நிதியும், ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் ரூ.1.27 லட்சம் நிதியும் தடுக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் செயல்படும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹஸ்புல் முஜாகின் அமைப்பின் ₹3.20 லட்சம் நிதியும், ஹர்கத் உல் முஜாகிதீன் அல் இஸ்லாமி அமைப்பின்₹34 லட்சம் நிதியும் தடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுபோல மொத்தம் 70 தீவிரவாத அமைப்புகளின் நிதி துடக்கப்பட்டுள்ளது.  அதிகபட்சமாக அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் ₹28 கோடி நிதி தடுக்கப்பட்டுள்ளது….

Related posts

வங்கதேசத்தில் பெய்த கனமழையால் முக்கிய ஆறுகளில் வெள்ளம்!

2ம் கட்டமாக நடந்த ஈரான் அதிபர் தேர்தல் பெசஸ்கியான் வெற்றி: ஒரு மாதத்திற்குள் பதவியேற்பு

இங்கிலாந்து புதிய பிரதமர் கியர் ஸ்டார்மருடன் பிரதமர் மோடி பேச்சு: தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய உறுதி