தொண்டி, ஏப்.7: தொண்டி அருகே அரசு பஸ் மோதி டூவீலரில் சென்ற மீனவர் பலியானார். தொண்டி அருகே நம்புதாளையை சேர்ந்த மீனவர் கருப்பையா(58). இவர் நேற்று முன்தினம் நம்புதாளையிலிருந்து ராமநாதபுரம் நோக்கி சென்றுள்ளார். அப்போது கிழக்கு கடற்கரை சாலை சோலியக்குடி பகுதியில் பின்னால் வந்த அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலையே பலியானார். இதுகுறித்து அரசு பேருந்து ஓட்டுனர் கன்னியாகுமாரி மாவட்டம் அரப்புரியை சேர்ந்த கிருஸ்துவராஜ்(34) தொண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.