பஸ் மீது லாரி மோதி விபத்து

 

வேடசந்தூர், செப். 23: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள கருக்காம்பட்டியில் கரூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூருவில் இருந்து கொடைக்கானலை நோக்கி நேற்று 14 பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தப் பஸ்சை மைசூரைச் சேர்ந்த நசுருல்லா என்பவர் ஓட்டிச் சென்றார். அப்போது கரூர் தென்னிலையில் இருந்து வந்த லாரி பஸ்சின் பின்னால் பயங்கரமாக மோதியது. இதில், பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் லாரியின் ஓட்டுனர் சுரேஷ் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். வேடசந்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை