திருத்தணி: ஆந்திராவில் இருந்து திருத்தணி வழியாக போதை பொருட்கள் கடத்தி வருவதாக திருவள்ளூர் எஸ்பி வருண்குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, திருத்தணி எஸ்ஐகுமார் தலைமையில் தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் இரவு பொன்பாடி சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அவ்வழியாக வந்த ஒரு பஸ்சில் இருந்த பயணிகளை போலீசார் சோதனை செய்தனர். அதில், ஒரு பெண் உள்பட 2 பேர் கஞ்சா பொட்டலம் வைத்திருந்னர். அவர்களை பிடித்து, காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்ததில் திருவள்ளூர் அருகே புட்லூரை சேர்ந்த சுகந்தி (30), கும்மிடிப்பூண்டி பத்மநாபன் என தெரிந்தது. அவர்களை கைது செய்தனர்…