பவானியில் பைக் திருடிய வாலிபர் சிறையில் அடைப்பு

 

பவானி, ஜூலை 21: மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் ஜக்கையன் (38). கூலி தொழிலாளி. பவானி வர்ணபுரம் 3-வது வீதியில் வசித்து வரும் இவர், கடந்த 12-ம் தேதி, வர்ணபுரம் 1-வது வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகில் தனது பைக்கை நிறுத்திவிட்டு வேலை செய்து கொண்டிருந்தார். வேலை முடிந்து வந்து பார்க்கும் போது நிறுத்தப்பட்டிருந்த பைக்கை காணவில்லை. பல்வேறு பகுதிகளில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால், ஏமாற்றம் அடைந்த ஜக்கையன் பவானி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் திருடப்பட்ட பைக்கில் பவானி பழைய பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரிக்கையில் அவர், பவானி அடுத்த காலிங்கராயன்பாளையம் வெத்தலை மார்க்கெட்டை சேர்ந்த ராஜேந்திரன் மகன் வெங்கடேஷ் (24) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, பைக்கை பறிமுதல் செய்த பவானி போலீசார், வெங்கடேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை