பூதப்பாண்டி, ஜூலை 4: பூதப்பாண்டியை அடுத்துள்ள வீரவநல்லூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (32). இவர் தனது மாடுகளை குளிப்பாட்ட நேற்று முன்தினம் மாலை பழையாற்றுக்கு சென்றபோது காட்டாற்று வெள்ளம் இழுத்து சென்றது. நாகர்கோவில் தீயணைப்பு துறையினர் மணிகண்டனை தீவிரமாக தேடும் பணியில் ஈடுப்பட்டனர். இரவு நேரமானதால் தேடுதலை நிறுத்தி சென்றனர். பின்னர் ேநற்று காலை தேடியதில் மணிகண்டனின் சடலம் கிடைத்தது. பூதப்பாண்டி போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.