பழநி மலைக்கோயில் ரோப்காரில் முதியோருக்கு தனி வழி

பழநி: பழநி மலைக்கோயில் ரோப்காரில் முதியோருக்கான தனிவழி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பழநி கோயிலில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்டப்பணிகள், பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள், பழநி கோயில் கும்பாபிஷேக பணிகளை விரைவுபடுத்துதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் ஆக.23ம் தேதி உபயதாரர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அறங்காவலர் குழுவினர் பழநி கோயில் ரோப்கார் நிலையத்தில் முதியோர், கைக்குழந்தைகள் வைத்திருக்கும் தாய்மார்கள் வசதிக்காக அமைக்கப்பட்ட தனிவழியினை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்….

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்