பழநி, ஜூலை 13: பழநி நகர் திறந்தவெளி கழிப்பிடமாக மாறுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் தனிநபர் கழிப்பறை அமைக்க நிதி ஒதுக்கீடு, பல இடங்களில் சுகாதார வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே கோயில் நகரான பழநியை சுகாதாரமான நகராக மாற்ற திறந்தவெளி கழிப்பிடம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.