பழநி அருகே காகித ஆலையில் தீ விபத்து

பழநி: பழநி அருகே உள்ள சாமிநாதபுரம் விஜி நகரைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன் (62). இவருக்கு சொந்தமான காகித ஆலை உள்ளது. நேற்று அந்த காகித ஆலையில் உள்ள பழைய பேப்பர் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பற்றி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.இதுகுறித்து பழநி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இத் தீ விபத்தில் சுமார் 150 டன் எடையுள்ள பழைய காகிதங்கள் எரிந்து நாசமானதாக காகித ஆலை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்….

Related posts

தமிழக அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்!!

கர்மவீரர் காமராஜர் அவர்களையும் அவர் ஆற்றிய சேவைகளையும் எந்நாளும் நினைவில் வைத்து போற்றுவோம்: டி.டி.வி. தினகரன்

வீட்டு மனை முறைகேடு: லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு ஐகோர்ட் தடை விதிப்பு