பழநி, செப்.15: பழநி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்புப்பணி நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை இம்மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான பழநி நகர், பாலசமுத்திரம், ஆயக்குடி, மானூர் மற்றும் பூலாம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் நிறுத்தப்படுமென மின்வாரிய செயற்பொறியாளர் பிரகாஷ்பாபு தெரிவித்துள்ளார்.