பழநியில் சாலையோர வியாபாரிகள் மனு கொடுக்கும் போராட்டம்

பழநி, ஆக. 23: தமிழ்நாட்டில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயில் உள்ள பழநி அடிவார பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. மேலும் பக்தர்களிடம் வியாபாரம் செய்வதற்காக ஏராளமானோர் சாலையோரங்களில் கடைகள் அமைத்துள்ளனர். இந்நிலையில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி சாலையோர ஆக்கிரமிப்புகள் கோயில் நிர்வாகம் சார்பில் அகற்றப்பட்டது.

இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி நேற்று 100க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் தலைமை அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை