தேனி, செப். 20: தேனி அருகே உள்ள 14 வயது சிறுமி கடந்த 16ஆம் தேதி மாலை வீட்டிலிருந்து கடைக்கு செல்வதாக கூறி சென்றவர் திரும்ப வீட்டுக்கு வரவில்லை. சிறுமியை பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிறுமியின் தந்தை பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சிறுமியை தேடி வருகின்றனர்.