சென்னை: பள்ளிகளில் எம்.பி.சி., பி.சி., என்ற பிரிவுகளை தான் பதிவு செய்கிறோம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். பள்ளி மாணவர்களிடம் சாதி பெயரை கேட்பதாக வெளியான தகவல் தவறானது என கூறினார். மாணவ, மாணவியிரின் உடல்நலன் கருதி அவர்களை பற்றிய தகவல் சேகரிக்கப்படுகிறது என தெரிவித்தார். சில அரசுப் பள்ளிகளில் தமிழ் பயிற்று மொழி வகுப்பு இல்லை என சொல்வது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என பேசினார். தமிழகத்தில் 54 அரசு பள்ளிகளில் தமிழ் பயிற்றுமொழியாக இல்லை என குற்றச்சாட்டு எழுந்தது. ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாக கொண்ட பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் வெளியானது. இந்நிலையில் ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாக மாற்றப்பட்டது தொடர்பான தகவல் குறித்து விசாரணை நடத்தப்படும் என கூறினார்….