புதுக்கோட்டை,ஜூன்13: 2023-24ம் கல்வியாண்டில் பள்ளி தொடங்கிய முதல் நாளிலேயே மாணவர்களுக்கு பாட புத்தகங்களும் நோட்டு புத்தகங்களும் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு வழிகாட்டியதன் பேரில் புதுக்கோட்டை மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் மஞ்சுளா ஆலோசனைக்கிணங்க மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ் திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் வாகவாசல் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மற்றும் முள்ளூர் அரசு உயர்நிலைப் பள்ளிகளில்களில் தமிழக அரசின் விலையில்லா பாடப் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கினார். பின்னர் புதிய மாணவர் சேர்க்கையை ஊக்குவித்தும் விதமாக அரசுப்பள்ளியில் மாணவர்களை சேர்த்த பெற்றோர்களை பாராட்டினார். நிகழ்வின் போது பள்ளித் துணை ஆய்வாளர் குரு மாரிமுத்து மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் உடன் இருந்தனர்.