பள்ளி ஆசிரியை வீட்டை உடைத்து கொள்ளை: மர்மநபர்களுக்கு வலை

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த அனுமந்தண்டலம் கூட்டுரோடு பகுதியில் வசிப்பவர் மரியபாஸ்டினா (42). மானாம்பதி கூட்டுரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறார். நேற்று முன்தினம் மரியபாஸ்டினா, வீட்டை பூட்டி கொண்டு சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். மதியம், அக்கம்பக்கத்தினர் பார்த்தபோது, நேற்று மதியம் அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்தது. உடனே மரியபாஸ்டினாவுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அவர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, அங்கிருந்த பிரோவை உடைத்த மர்மநபர்கள், 5 சவரன் நகை, வீட்டின் வெளியே நிறுத்தியிருந்த பைக் ஆகியவற்றை திருடி சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார். புகாரின்படி பெருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். …

Related posts

63 வயது மனைவியை குத்தி கொன்ற 72 வயது கணவர்

12 டூவீலர்களை திருடிய ‘கோடீஸ்வரர்’ கைது: பல கோடி சொத்துக்கு அதிபதி

தாயுடன் கள்ளத்தொடர்பு; விவசாயி கொன்று வீச்சு: வாலிபர் கைது