பள்ளப்பட்டி நகராட்சி பகுதிகளில் சொத்துவரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

 

அரவக்குறிச்சி, நவ.18: பள்ளப்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 27 வார்டுகளில் சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளப்பட்டி நகராட்சி ஆணையர் பால்ராஜ் தெரிவித்துள்ளதாவது: பள்ளப்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 27 வார்டுகளில் சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டணம் சென்ற (2021 – 2022, 2022-2023ம் ஆண்டுகளுக்கு) செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பை ஆணையாளர் பள்ளப்பட்டி நகராட்சி உத்தரவில் பேரில் 27 வார்டுகளிலும் துண்டிக்கப்படுகிறது.

இதன்படி முதலாவதாக வார்டு எண்.5, 18 ஆகிய வார்டுகளில் குடிநீர் கட்டணம் நிலுவை வைத்துள்ளவர்களின் 5 பேரின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் சொத்துவரி குடிநீர் கட்டணம் நிலுவை வைத்துள்ளவர்களின் இணைப்பு தினமும் துண்டிக்கப்படும். நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செலுத்த வேண்டிய சொத்துவரி குடிநீர் கட்டணம் காலியிட வரி வசூல் நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்படும். இவ்வாறு ஆணையர் பால்ராஜ் தெரிவித்தார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை