திருப்பூர், செப். 11: திருப்பூர் தெற்கு மாநகர இளைஞரணி அமைப்பாளர் ராஜு ஏற்பாட்டில் ஏராளமான இளைஞர்கள் பல்வேறு கட்சிகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணியில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், செல்வராஜ் எம்.எல்.ஏ., ஈரோடு எம்.பி, கே.இ. பிரகாஷ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகர செயலாளர் நாகராஜ், வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ், நல்லூர் பகுதி செயலாளர் மேங்கோ பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.