பராமரிப்பு பணி காரணமாக ஓயாமரி சுடுகாடு 3 நாட்கள் தற்காலிகமாக மூடப்படும்

 

திருச்சி, ஜூன் 2: திருச்சி மாநகராட்சியிலுள்ள ஓயாமரி சுடுகாடு பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் இன்று முதல் மூன்று நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்படுவதாக மாநகராட்சி கமிஷனர் சரவணன் அறிவித்துள்ளார்.
திருச்சி மாநகராட்சி வார்டு எண்.15க்கு உட்பட்ட ஓயாமரி சுடுகாட்டில் உடல்களை எரியுட்டும் நவீன தகன மேடைகள் உள்ளன. இந்த தகன மேடைகளில் ஏற்பட்டுள்ள சிறு பழுதுகளை சரி செய்யும் பணி இன்று முதல் துவங்குகிறது.

இதனை முன்னிட்டு நாளை (ஜூன் 3) முதல் ஜூன் 5 வரை மூன்று நாட்களுக்கு உடல்களை எரியூட்ட இயலாது. எனவே ஓயாமரி சுடுகாடு தற்காலிகமாக மூன்று நாட்களுக்கு மூடப்படுகிறது. மேலும் ரங்கம் அம்பேத்கர் நகர் மற்றும் கோணக்கரை ஆகிய பகுதிகளில் உள்ள நவீன எரிவாயு தகன மேடைகள் தொடர்ந்து செயல்படும் என திருச்சி மாநகராட்சி கமிஷனர் சரவணன் அறிவித்துள்ளார்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்