பரமக்குடியில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பரமக்குடி, பிப். 28: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தரின் உருவ பொம்மையை எரித்து தாய் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தாய் தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் பி.எம்.பாண்டியன் தலைமையில் 35க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் காவிரி நதிநீர் மேலாண்மை விஷயத்தில் தமிழக அரசு எதிராக செயல்படும் ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷமிட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும் ஒன்றிய அரசின் உத்தரவின் பேரில் ஆணைய தலைவர் ஹல்தர் ஒரு தலை பட்சமாக செயல்படுவதாக குற்றசாட்டை முன் வைத்த தாய் தமிழர் கட்சியினர், அவரது உருவபொம்மையை எரித்து கண்டனத்தை தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

Related posts

15 ஆண்டுகளை கடந்த அரசு வாகனங்கள் பதிவுச்சான்று புதுப்பிப்பு ஓராண்டு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

ஒருமுறை பயன்படுத்திய 76 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல்

பெண் டாக்டரிடம் ₹1 லட்சம் மோசடி பேர்ணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் பார்சலில் தடை செய்யப்பட்டுள்ள பொருள் அனுப்பியதாக கூறி