பப்ஜியால் வந்த வினை தாயை சுட்டுக்கொன்ற சிறுவன்

லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் யமுனாபுரம் காலனி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகி உள்ளான். இதனை விளையாடக்கூடாது என்று சிறுவனின் தாயார் கண்டித்து வந்துள்ளார். ராணுவ வீரரான சிறுவனின் தந்தை மேற்கு வங்கத்தில் பணியில் உள்ளார். இந்நிலையில் கடந்த சனியன்று வழக்கம் போல் சிறுவனை அவனது தாயார் கண்டித்துள்ளார். ஆத்திரமடைந்த சிறுவன் வீட்டில் இருந்த துப்பாக்கியால் தாயை சுட்டுக்கொன்றுள்ளான்.  இது குறித்து வெளியே கூறினால் உன்னையும் கொன்று விடுவேன் என்று 9 வயது தங்கையையும் சிறுவன் மிரட்டி உள்ளான். பின்னர் வீட்டில் இருந்த ஒரு அறையில் தாயின் சடலத்தை மறைத்துவிட்டு அறையை பூட்டிவிட்டதாக தெரிகின்றது. துர்நாற்றம் வராத வகையில் அறை முழுவதும் வாசனை திரவியத்தை அடித்துள்ளார். நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசத்தொடங்கியுள்ளது. அதன் பின் சிறுவன் இது தொடர்பாக தனது தந்தைக்கு செல்போனில் தகவல் கூறியுள்ளான். பின்னர் அவர் அக்கம்பக்கத்தினரிடம் தொடர்பு கொண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசிடம் முதலில் பொய் கதையை கூறிய சிறுவன் பின்னர், தாயை சுட்டுக்கொன்றதை ஒப்புக்கொண்டார்….

Related posts

இளைஞர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

சென்னை: கஞ்சா கடத்திய இருவர் கைது

அரக்கோணத்தில் 14 கிலோ கஞ்சா பறிமுதல்