பத்திர பதிவு அதிகாரிகள் மாற்றம்

 

கோவை, மார்ச் 15: கோவை மண்டல பத்திர பதிவுத்துறையில் துணை பதிவு தலைவராக (டிஐஜி) ஆக பணியாற்றிய சுதா மல்யா சென்னைக்கு மாற்றப்பட்டார். இவருக்கு பதிலாக பிரபாகர் டிஐஜி ஆக நியமிக்கப்பட்டார். இதேபோல் கோவை தெற்கு பகுதி உதவி பதிவுத்துறை தலைவர் (ஏஐஜி) சிவராஜ் மாற்றப்பட்டார்.

இவருக்கு பதிலாக ராஜா என்பவர் நியமனம் செய்யப்பட்டார். பதிவுத்துறையில் பதிவு பணிகளை வேகமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பதிவு பணிகளில் தாமதம் செய்யக்கூடாது. பத்திரங்களை ேதவையின்றி நிராகரிக்க கூடாது. வாரந்தோறும் திங்கள் கிழமை குறை தீர்ப்பு கூட்டம் நடத்த குறைகளை கேட்க வேண்டும். கடந்த காலங்களில் டிஐஜி அலுவலகத்தில் குறை கேட்பு கூட்டம் சரியாக நடத்தப்படாமல் இருந்தது.

மக்களை சந்தித்து மனுக்களை பெறாமல் இருந்ததால் புகார்கள் அதிகமானது. இனி இதுபோன்ற நிலைமை இருக்காது. கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டத்தில் 56 சார் பதிவாளர் அலுவலகங்களில் கடந்த காலங்களை விட அதிகளவு பத்திரங்கள் பதிவு செய்து வருவாய் அதிகரிக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 3500 கோடி ரூபாய்க்கு அதிகமாக வருவாய் பெறப்படும் என பதிவுத்துறையினர் தெரிவித்தனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை