பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல்

சிவகாசி, செப்.18: சிவகாசி அருகே கட்டிடத்தில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. சிவகாசி அருகே எம்.துரைச்சாமி -வேண்டுராயபுரம் ரோட்டில் மாரனேரி எஸ்.ஐ சுந்தரமகாலிங்கம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள முனியசாமி கோவில் பின்புறம் செல்வம் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் உரிய அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அங்கு இருந்த 4 பெட்டி பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார் செல்வம் (52) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி