பணியின் போது உயிரிழந்த 32 காவலர்கள் குடும்பத்திற்கு தலா 3 லட்சம்

சென்னை: தமிழக காவல் துறையில்  கடந்த 2019-20  மற்றும் 2012ம் ஆண்டு சென்னை மாநகர காவல் துறையில் பணியின் போது உடல் நலக்குறைவு மற்றும் சாலை விபத்துகளில் சென்னை ஆயுதப்படை மற்றும் சிறப்பு பிரிவில் பணியாற்றிய 8 காவலர்கள், மாநகர வடக்கு மண்டலத்தில் 2 பேர், கிழக்கு மண்டலத்தில் 8 பேர், தெற்கு மண்டலத்தில் 5 பேர், மேற்கு மண்டலத்தில் 3 பேர், போக்குவரத்து பிரிவில் 6 என மொத்தம் 32 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உயிரிழந்தனர். முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சத்திற்கான காசோலைகளை உயிரிழந்த 32 காவலர்களின் குடும்பத்தாரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று அழைத்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வழங்கினார். நிகழ்ச்சியின் போது தலைமையிட கூடுதல் கமிஷனர் லோகநாதன், இணை கமிஷனர் சாமுண்டீஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்….

Related posts

புரசைவாக்கம் திடீர் நகரில் அடிப்படை வசதிகள் கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஐ.டி துறை சார்ந்த பட்டதாரிகள் நலன் கருதி மாதவரத்தில் ஹைடெக் சிட்டி: வடசென்னை மக்கள் கோரிக்கை

96 வயது சுதந்திர போராட்ட வீரருக்கான ஓய்வூதிய பாக்கி ரூ.15 லட்சம் அரசால் வழங்கப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்