சென்னை: தமிழக காவல் துறையில் கடந்த 2019-20 மற்றும் 2012ம் ஆண்டு சென்னை மாநகர காவல் துறையில் பணியின் போது உடல் நலக்குறைவு மற்றும் சாலை விபத்துகளில் சென்னை ஆயுதப்படை மற்றும் சிறப்பு பிரிவில் பணியாற்றிய 8 காவலர்கள், மாநகர வடக்கு மண்டலத்தில் 2 பேர், கிழக்கு மண்டலத்தில் 8 பேர், தெற்கு மண்டலத்தில் 5 பேர், மேற்கு மண்டலத்தில் 3 பேர், போக்குவரத்து பிரிவில் 6 என மொத்தம் 32 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உயிரிழந்தனர். முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சத்திற்கான காசோலைகளை உயிரிழந்த 32 காவலர்களின் குடும்பத்தாரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று அழைத்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வழங்கினார். நிகழ்ச்சியின் போது தலைமையிட கூடுதல் கமிஷனர் லோகநாதன், இணை கமிஷனர் சாமுண்டீஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்….