பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

 

ஓசூர், மே 28: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பாகலூர் சொக்கரசனப்பள்ளி பகுதியில், பாகலூர் எஸ்ஐ ராஜசங்கிலிகருப்பன், பயிற்சி எஸ்ஐ கணேஷ்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தைலம்பள்ளம் அருகே பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த ஆஞ்சனப்பா(38), முரளி(40), ரமேஷ்(31), ஹரீஷ்(31), கோவர்த்தன்(25) மற்றும் ராஜப்பா(24) ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ₹10,490 ரொக்கம் மற்றும் 6 டூவீலர்கள், 6 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்