பணகுடியில் டாஸ்மாக் பார் சூறை கவுன்சிலரின் கணவர் கைது

பணகுடி,ஜன.4: பணகுடி டாஸ்மாக் பாரில் ரகளையில் ஈடுபட்ட பேரூராட்சி பெண் கவுன்சிலரின் கணவரை போலீசார் கைது செய்தனர். பணகுடி பைபாஸ் ரோட்டில் டாஸ்மாக் பார் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு பணகுடி பேரூராட்சி கவுன்சிலர் ஆஷாவின் கணவர் ராஜா அங்கு வந்தார். அங்கு மது அருந்தி விட்டு, அதற்கான பணம் கொடுக்காமல் மாமூல் தர வேண்டும் என்றும், மதுபானம் கேட்டும் பார் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதற்கு ஊழியர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதில் ஆத்திரமடைந்த அவர், பாரில் இருந்த சேர்களை உடைத்து ரகளையில் ஈடுபட்டார். இவை அனைத்தும் பாரில் இருந்த சிசிடிவி காமிராவில் பதிவானது. இது தொடர்பாக பார் ஊழியர் பணகுடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரகளையில் ஈடுபட்ட ராஜாவை கைது செய்தனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை