பட்டாசுகளை பாதுகாப்புடன் வெடிக்க கறம்பக்குடியில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம்

 

கறம்பக்குடி,நவ.10: விபத்தில்லா தீபாவளியை கொண்டாடும் வகையில் பட்டாசுகளை பாதுகாப்புடன் வெடிப்பது குறித்து கறம்பக்குடியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை தீயணைப்பு வீரர்கள் வழங்கினர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் விபத்தில்லா தீபாவளியை கொண்டாடும் வகையில் பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்து கறம்பக்குடி தீயணைப்பு நிலையம் சார்பாக விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கறம்பக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு கார்த்திகேயன் தலைமையில் வீரர்கள் பேருந்து நிலையம், புதுக்கோட்டை சாலை, சீனிக்கடை முக்கம், அம்புக்கோவில் முக்கம் உள்கடை வீதி, மார்க்கெட் பகுதி ஆகிய பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொது மக்கள், பெண்கள் ஆகியோரிடம் பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிக்கும் போது தீவிபத்து ஏற்பட்டால் தீயணைப்பு நிலையத்திற்கு போனில் தொடர்பு கொண்டும் தெரிய படுத்த வேண்டும் என்று விபத்தில்லா தீபாவளியை கொண்டாட விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை