பட்டதாரி பெண் மாயம்

நாகர்கோவில், டிச. 2: நாகர்கோவில் பட்டகசாலியன்விளை இசக்கியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மனைவி மோகனா(53). இவருக்கு ஒரு மகளும், 2 மகனும் உள்ளனர். இவரது மகள் கவுசல்யா(20). இவர் பிகாம் படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று கவுசல்யா வீட்டைவிட்டு வெளியே சென்றவர் வீட்டிற்கு திரும்பவில்லை. இது குறித்து மோகனா நேசமணிநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி