சிவகங்கை, ஜூலை 6: சிவகங்கையில் முன்னாள் படைவீரர்கள், படைப்பணியாற்றுவோர் சிறப்பு குறைதீர் கூட்டம் ஜூலை 11ல் நடக்க உள்ளது. சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர்கள், படைப்பணியாற்றுவோர், சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூடத்தில் ஜூலை 11 பிற்பகல் 4 மணிக்கு நடைபெறவுள்ளது. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர், படைவீரர், சார்ந்தோர் அன்றைய தினம் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வருகை புரிந்து, தங்களது குறைகளை இரட்டை பிரதிகளாக வழங்கி பயனடையலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.