பஞ்சப்பூர் புதிய பேருந்து முனையம் கட்டுமான பணி

 

திருச்சி, ஆக.23:திருச்சி அடுத்த பஞ்சப்பூர் புதிய பேருந்து முனைய கட்டுமான பணிகளை அமைச்சர் கே.என்.நேரு நேற்று ஆய்வு செய்தார். திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை பஞ்சப்பூரில் ரூ.350 கோடியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டப்பட்டு வருகிறது. அதனை சுற்றி பல்வேறு கட்டமைப்புகள் கொண்டு வரப்படவுள்ளது. இந்நிலையில் திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் புதிய ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுமான பணிகளை தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று நேரில் பார்வை விட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுமான பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், நகரப் பொறியாளர் சிவபாதம், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி