நோய்களில் இருந்து பாதுகாத்து கொள்வது குறித்து சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாகப்பட்டினம்,ஏப்.7: பருவ கால நோய்களில் இருந்து பாதுகாத்துக்கொள்வது குறித்து சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நாகப்பட்டினம் அருகே ஒரத்தூர் சிதம்பரனார் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சிவா தலைமை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் பாலசண்முகம் வரவேற்றார். நாகப்பட்டினம் மாவட்ட சுகாதாரத் துறையின் பயிற்சியாளர் மணவாளன் கோடைகாலத்தில் ஏற்படும் நோய்கள் பற்றியும் அதில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வது குறித்து பேசினார். சுகாதாரத்துறை தொழில்நுட்ப உதவியாளர் கோகுலநாதன் குளிர்கால நோய்களும் மற்றும் கொசு, ஈக்களால் ஏற்படும் நோய்கள் பற்றி பேசினார். வடவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் சுத்தானந்த கணேஷ் சத்து மாத்திரைகள், தடுப்பூசிகள் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை