வேலாயுதம்பாளையம், மார்ச்30: கரூர் மாவட்டம் நொய்யல் அருகே குறுக்குச்சாலை பங்களா நகர் பகுதியில் ஒருவர் மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு ஒருவர் மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் குறுக்குச்சாலை பங்களா நகர் பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் (39) என்பவரை கைது செய்து அவர் விற்பனைக்கு வைத்திருந்த 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நொய்யல் அருகே மது விற்றவர் கைது
previous post