நெல்லையில் காங்கிரஸ் கொடியேற்று விழா

நெல்லை, டிச.31: காங்கிரஸ் கட்சியின் 139வது நிறுவன தினத்தை முன்னிட்டு நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் கட்சி கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கினார். முன்னாள் ஒன்றிய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு காங்கிரஸ் தியாகிகளை கவுரவித்தார். நிகழ்ச்சியில் மாநில செயலாளர் ஜோதி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சொக்கலிங்க குமார், பரணி இசக்கி, கவிபாண்டியன், மாவட்ட பொருளாளர் ராஜேஷ்முருகன், ராகுல்காந்தி பேரவை மாநில தலைவர் புலித்துரை, துணைத்தலைவர்கள் வெள்ளப்பாண்டியன், மாரியப்பன், அருள்ராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் கிருஷ்ணன், மணி, மாவட்ட நிர்வாகிகள் சின்னபாண்டியன், கண்ணன், செல்லப்பன், மகாராஜன், ஐஎன்டியுசி ராதாகிருஷ்ணன், மகளிரணி நிர்வாகிகள் மெட்டில்டா, ரோஸ்லின், ராணுவ பிரிவு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

 

Related posts

ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி சிப்காட் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை

விக்கிரவாண்டி தொகுதியை சார்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க ஊதியத்துடன் விடுமுறை: தொழிலாளர் உதவி ஆணையர் அறிவிப்பு