நீலகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் வேட்பு மனுதாக்கல்

 

ஊட்டி,மார்ச் 26: அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் நேற்று வேட்புமனுதாக்கல் செய்தார். பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கும் நிலையில், கடந்த 20ம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கியது. நீலகிரி தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் சபாநயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்செல்வன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக, அதிமுகவினர் ஊட்டி காபி அவுஸ் பகுதியில் கூடினர். அங்கிருந்து அதிமுகவினர் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் சென்றனர்.  ஊர்வலத்தில் மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத், மேட்டுப்பாளையும் எம்எல்ஏ செல்வராஜ், கூடலூர் எம்எல்ஏ பொன் ஜெயசீலன் மற்றும் முன்னாள் எம்.பி. அர்ச்சுணன் ஆகியோர் உடன் சென்றனர். நீலகிரி மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் அருணாவிடம் லோகேஷ் தமிழ்செல்வன் வேட்புமனுதாக்கல் செய்தார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை