நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை மஞ்சளாற்றில் வெள்ளப்பெருக்கு

 

வத்தலக்குண்டு, டிச. 11: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை காரணமாக, மஞ்சளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு நகர் நடுவில் மஞ்சளாறு ஓடுகிறது. நீண்ட நாட்களாக தண்ணீர் செல்லாத காரணத்தால், ஆற்றில் செடிகள் அடர்ந்து வளர்ந்து புதர் மண்டி காணப்பட்டதுடன், குப்பைகள் குவிந்து கிடந்தன.

இந்நிலையில் நீரப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை காரணமாக மஞ்சளாறு அணை நிரம்பியதையடுத்து அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மஞ்சளாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை