நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தந்தை பெரியார் திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்

 

சீர்காழி, ஜூன் 22: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே தந்தை பெரியார் திராவிட கழகத்தின் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் டெல்டா மண்டல செயலாளர் பெரியார் செல்வம் தலைமை வகித்தார். கொள்ளிட ஒன்றியத்தின் துணைச் செயலாளர் பாலச்சந்தர், சீர்காழி பொறுப்பாளர் முகேஷ், சீர்காழி நகர தந்தை பெரியார் திராவிட கழக தலைவர் மனோஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தந்தை பெரியார் திராவிட கழக மாவட்ட செயலாளர் பார்த்திபன், மாவட்ட தலைவர் பரசுராமன், மக்கள் தமிழக கட்சி மாவட்ட செயலாளர் முரளி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்க மாவட்ட செயலாளர் செந்தில், திராவிடர் கழக மாவட்ட தலைவர் குணசேகரன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். நிகழ்ச்சியில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், மாணவரணி பொறுப்பாளர்கள் வசந்து ராஜ், அருண் உள்ளிட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை