நில உரிமை மீட்புக்குழு போராட்டம்

 

திருவள்ளூர்: திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி எதிரே அரசால் வீட்டுமனை பட்டா கொடுத்தும், நிலத்தை காட்டாததைக் கண்டித்து பறையர் பேரியக்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தலைவர் சிவகுரு தலைமை தாங்கினார். தாமரைப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட அம்மனம்பாக்கம், தமிழ் காலனி, தாமரைப்பாக்கம் காலனி, தெலுங்கு காலனி ஆகிய பகுதிகளில் வசிக்கும் 222 ஆதிதிராவிடர், பறையர் இன மக்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பேரியக்கம் மாவட்ட செயலாளர் தாமரை செல்வகுமார் மற்றும் பேரியக்க பொறுப்பாளர்கள், பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை