நித்திரவிளை அருகே மதுபானம் பதுக்கிய 3 பேர் கைது

 

நித்திரவிளை, ஜூன் 24 ; நித்திரவிளை இன்ஸ்பெக்டர் ரமேஷ் மோகன், எஸ்.ஐ.க்கள் ஞானசிகாமணி, சந்திரகுமார், தனிப்பிரிவு ஏட்டு ஸ்டாலின் மற்றும் போலீசார் திருட்டுத்தனமாக மது விற்பனையை தடை செய்யும் பொருட்டு ரோந்து பணிகள் மேற்கொண்டனர்.

அப்போது நடைக்காவில் மது பதுக்கி வைத்திருந்த ராஜேஷ் (35), என்பவரை மடக்கி பிடித்து 10 குவார்ட்டர் மது பாட்டிலையும், எஸ்.டி. மங்காடு புதுக்குளம் பகுதியில் மது பதுக்கி வைத்திருந்த பிஜு (41), என்பவரை மடக்கி பிடித்து 8 குவார்ட்டர் மதுவையும், ஆலங்கோடு பருத்திவிளை பகுதியில் மது பதுக்கி வைத்திருந்த றசல்ராஜ் (55), என்பவரை மடக்கி பிடித்து 6 குவார்ட்டர் மதுவையும் பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து 3 பேர் மீதும் நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை