நிதி நிறுவனத்தில் ரூ.20 ஆயிரம் திருட்டு

 

அந்தியூர்,ஜூலை22:அந்தியூரிலுள்ள பவானி ரோட்டில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதனை சந்திபாளையம் வடக்குத் தெருவை சேர்ந்த நவீன்குமார்(30) நடத்தி வருகிறார். இவர் நேற்று மதியம் தனது நிதி நிறுவனத்தின் முன் பக்க கதவை பூட்டிவிட்டு, தனது வீட்டிற்கு மதிய உணவு சாப்பிடுவதற்காக சென்றுவிட்டார். பின்பு சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த பொழுது தனது நிதி நிறுவனத்தின் முன் பக்க கண்ணாடி கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த பொழுது மேஜை டிராவில் வைக்கப்பட்டிருந்த ரூ.20 ஆயிரம் திருட்டுப் போய்ருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் அந்தியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி