நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியீடு: ஊராட்சி தலைவர் புது முயற்சி

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியம் சிறுதாவூர் ஊராட்சி தலைவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வேதா அரு. தேர்தலின் போது கிராமசபை கூட்டங்களில் ஊராட்சி வரவு, செலவு குறித்த தகவல்களை வெள்ளை அறிக்கையாக வெளியிடுவேன் என உறுதியளித்தார். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று குடியரசு தின விழா ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்தது. அப்போது, தேசிய கொடியை ஏற்றி வைத்த ஊராட்சி மன்ற தலைவர் வேதா அருள், சிறுதாவூர் ஊராட்சியில் பொறுப்பேற்கும்போது இருந்த நிலுவைத் தொகை, அதன் பிறகு பல்வேறு திட்டங்களின் கீழ் அரசிடம் இருந்து வரப்பெற்ற தொகை உள்பட அனைத்தையும் துண்டு பிரசுரமாக வெளியிட்டு பொதுமக்களுக்கு வழங்கினார். மேலும், ஊராட்சி பணிகள் தொடர்பான சந்தேகங்கள் குறித்து ஊராட்சி அலுவலகத்தில் நேரடியாக கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்றார்….

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை