நாளை மின் குறைதீர் கூட்டம்

 

சிவகங்கை, ஜூன் 19: சிவகங்கை மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் ரவி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, திருப்பத்தூரில் மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம் நாளை, காலை 11மணி முதல் 1 மணி வரை திருப்பத்தூர் மின் பகிர்மான செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்க உள்ளது. இதில் திருப்பத்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் பயனீட்டாளர்கள், விவசாயிகள்,பொதுமக்கள் கலந்துகொண்டு மின்வாரியம் தொடர்பான தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை