நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீ விபத்து..!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூடுதல் கட்டிடத்தில் செயல்படும் மாவட்ட தோட்டக்கலை தொழில்நுட்ப ஆதார் மைய அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. முக்கிய ஆவணங்கள், கணினிகள் எரிந்து சேதம்; 3 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. விபத்து குறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். …

Related posts

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னையில் ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இன கட்டுப்பாட்டு சிகிச்சை மேற்கொள்ள மாநகராட்சி நடவடிக்கை

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி