நாமக்கல் அருகே திருமணமான 20 நாட்களில் வடமாநில காதலர்கள் தற்கொலை: சிறுமியின் பெற்றோர் புகார் அளித்ததால் விபரீதம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் திருமணமான இருபதே நாட்களில் வடமாநில காதலர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். பள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள நூற்பாலையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுபஜித் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர், தனது சொந்த ஊரைச் சேர்ந்த 10-ம் வகுப்பு சிறுமியான சப்ஜனாவை காதலித்து வந்து நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன்பு அவரை திருமணம் செய்தார். இதன்பின்னர் இருவரும் பள்ளிப்பாளையத்தில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், இந்த திருமணம் குறித்து சிறுமி சப்ஜனாவின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட அச்சம் காரணமாக சுபஜித் – சப்ஜனா தம்பதியினர் தங்கள் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனையடுத்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்