நாமக்கல்லில் வரும் 20ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாமக்கல், செப்.18: நாமக்கல்லில் வரும் 20ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும், மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு, விசவாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளுக்கு தீர்வு காணப்படுகிறது. இம்மாதத்திற்கான, மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 20ம் தேதி, காலை 10.30 மணிக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்துகொள்ளலாம். கூட்டத்தின் மூலம், வேளாண் இடு பொருள் இருப்பு விபரங்கள், வேளாண் உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், தங்களது கோரிக்கைகளையும் தெரிவித்து தீர்வு பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்