நாடு முழுவதும் 35,178 பேருக்கு கொரோனா

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா  பாதிப்பு குறித்த புள்ளி விவரங்களை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.  நேற்று காலை 8 மணி வரையிலான நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 35,178 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,22,85,857 ஆக அதிகரித்துள்ளது. குணமடைவோர் சதவீதம் 97.52 ஆக உள்ளது. நோய் பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 440  பேர் இறந்துள்ளனர். மொத்த கொரோனா இறப்புக்களின் எண்ணிக்கையானது 4,32,519ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையானது 3,67,415ஆக குறைந்துள்ளது. இது கடந்த 148நாட்களில் குறைந்தபட்ச எண்ணிக்கையாகும். ஒரு நாளைக்கு 1.96 சதவீதம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் மட்டும் 17,97,559 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 49,84,27,083 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. …

Related posts

பாலியல் தொல்லை:‘ஈஷா’ மருத்துவர் மீது போக்சோ : நீதிபதியிடம் 9 மாணவிகள் வாக்குமூலம்

போக்குவரத்து விதிகளை மீறி கார் பயணம் ராஜஸ்தான் துணை முதல்வரின் மகனுக்கு ரூ. 7,000 அபராதம்

காங்கிரசில் நகர்ப்புற நக்சல்கள்: பிரதமர் மோடி கடும் தாக்கு